Showing posts with label பஞ்சப்பதி. Show all posts
Showing posts with label பஞ்சப்பதி. Show all posts

Thursday, 26 June 2014

முட்டப்பதி



அய்யாவின் 5 பதிகளில் ஒன்று முட்டப்பதி. முட்டப்பதியில் பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் வாகன பவனியும் தர்மங்களும் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

முட்டபத்தியில் திருவிழா முடிந்தது சுவாமிதோப்பில் இருந்து முத்துகுடை ஊர்வலம் முட்டப்பதிக்கு வருகிறார்கள்.

முட்டப்பதி கடலுகருள் அய்யா இரண்டு முறை விஞ்ஞை பெற்றார் என்பது முட்டப்பதியின் சிறப்பாகும்.

அம்பலப்பதி



அம்பலப்பதியில் ஐப்பசிமாதம் முதல் வெள்ளிகிழமை கொடியேறி 11நாள் திருவிழா நடைபெறும்.

96 தத்துவங்களை கொடைபதி அம்பலபதி.

திரு ஏடுவாசிப்பு பங்குனிமாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு பட்டாவிஷேகம் நடைபெறும்.

தாமரையூர் பதி



“நாராயணரும் நல்லதிருச் செந்தூரில்

பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து

ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்

நன்றான மாசி நாளான நாளையிலே

சான்றோர் வளரும் தாமரையூர் நல்பதியில்

மூன்றான சோதி உறைந்திருந்த தெச்சணத்தில்

வந்திருந்த நல்பதியின் வளமை கேளம்மானை”

- அகிலம்

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.

7 நாளும் சுவாமி தோப்பு பதியில் பாட்டாபிஷேகம் நிறைவேறியபின் 7 நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

சுவாமி தோப்பு தலைமைபதி



சுவாமி தோப்பு தலைமைபதியில் ஆண்டுக்கு மூன்று திருவிழா நடைபெறும்.

ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருநாள் நடைபெறும்.

வைகாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

மாசி 20 அய்யாவின் திரு அவதாரம் நித்தம் நித்தம் திருநாள் காணும் ஒரே பதி சுவாமிதோப்பு தலைமைபதி.

பஞ்சப்பதி



பஞ்சப்பதி என்பது தென்னிந்திய சமயமான அய்யாவழியின் புனித தலங்களாகும். இவை ஐந்து ஆகும்.

சுவாமிதோப்பு பதி

அம்பலப்பதி

முட்டப்பதி

பூப்பதி

தாமரைகுளம் பதி

மேலும் அவதாரப்பதியும் வாகைப்பதியும் இரண்டாம் நிலை புனித தலங்களாக கருதப்படுகிறது.