மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார், "பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்" தொடரும்..
அய்யா வழி
The History of Ayyavazhi traces the religious history of Ayyavazhi, a belief-system originated in mid-nineteenth century in Southern India.
Saturday 5 July 2014
அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - VI
மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார், "பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்" தொடரும்..
Monday 30 June 2014
மாப்புக் கேட்டல்
அய்யா நாங்கள்
அறிந்து அறியாமல் செய்ததெல்லம்
அய்யா பொறுக்கனும். (5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொருமை தரனும்
அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுல் கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.
அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ் சலம் இல்லாமல்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்! அய்யா உண்டு
Subscribe to:
Posts (Atom)