Showing posts with label அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - VI. Show all posts
Showing posts with label அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - VI. Show all posts

Saturday 5 July 2014

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - VI


பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.
மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார், "பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்" தொடரும்..